திருட்டு நகைகளை எப்படி கண்டுபிடிப்பீர்கள்?, துப்பாக்கியால் சுடுவது
எப்படி?, எப்ஐஆர் என்றால் என்ன? என்று போலீஸாரிடம் சரமாரியாக கேள்வி கேட்டு
அசத்தினர் பள்ளி மாணவர்கள்.
நேற்று முன்தினம் சென் னையில் உள்ள பல காவல் நிலையங்களுக்கு பள்ளி
மாணவ-மாணவிகள் நேரில் சென்று பார்வையிட்டனர். போலீஸாரின் பணிகள் குறித்து
மாணவ-மாணவிகளுக்கு விளக்கி கூறப்பட்டது. அப்போது மாணவ-மாணவி கள்,
எப்.ஐ.ஆர். என்றால் என்ன? துப்பாக்கியால் சுடுவது எப்படி? என்பது பற்றி
ஆர்வ மாக கேட்டனர். இதற்கு போலீஸாரும் பொறுமையாக பதில் கூறினர்.
துப்பாக்கியை எடுத்துக்காட்டி அதில் சுடுவது குறித்தும், குண்டை எந்த
வழியாக போடுவது என்பது குறித்தும் விளக்கி கூறினர். துப்பாக்கியை மிக
அருகில் பார்த்த மாணவர்கள் அதை தொட்டுப்பார்த்தும் மகிழ்ந்தனர்.
திருட்டுபோன நகைகளை எப்படி கண்டுபிடிப்பீர்கள்? குற்றவாளிகளை எப்படி
பிடிப்பீர்கள்? என்றெல்லாம் மாணவர்கள் கேள்வி கேட்க, அவற்றிற்கும் போலீஸார்
பதில் கூறினர். முடிவில் போலீஸ் நிலைய செயல்பாடுகள் பற்றிய தேர்வும்
மாணவர்களுக்கு வைக்கப்பட்டது. அதில் அதிக மதிப்பெண் பெற்ற இரண்டு மாணவர்கள்
தேர் ந்தெடுக்கப்பட்டனர். இப்படி ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் 2 மாணவர்கள்
தேர்ந்தெடுக்கப் பட்டு, அவர்கள் அனைவரும் வருகிற 29-ம் தேதி சென்னை போலீஸ்
கமிஷனர் அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டு பரிசுகளும், சான்றிதழ்களும்
அளிக்கப்பட உள்ளன. குழந்தைகள் மீதான வன்முறைகள் பற்றி 1098 என்ற எண்ணிலும்,
பெண்கள் மீதான வன்முறைகள் குறித்து 1091 என்ற எண்ணிலும் புகார்
தெரிவிக்கலாம் என்றும் மாணவ-மாணவிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
No comments:
Post a Comment