பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள், இன்று, கோவை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறுகின்றன.
ராபர்ட் பாஷ் மற்றும் சித்தாபுதுார் மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர்
சங்கம் சார்பில், மாநகராட்சி மற்றும் அரசு பள்ளி மாணவ, மாணவியரிடையே,
நவம்பர் 1 முதல், விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. 14, 17, 19
வயதுக்கு உட்பட்டு நடத்தப்படும் மாவட்ட அளவிலான போட்டிகளாகும் இவை.
இன்று, கபடி, த்ரோபால், கோகோ, வாலிபால் போட்டிகளும், நாளை, தடகளப் போட்டிகளும் நடத்தப்படுகின்றன. போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு, கோப்பையும், சான்றிதழும் வழங்கப்படுகின்றன.
இன்று, கபடி, த்ரோபால், கோகோ, வாலிபால் போட்டிகளும், நாளை, தடகளப் போட்டிகளும் நடத்தப்படுகின்றன. போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு, கோப்பையும், சான்றிதழும் வழங்கப்படுகின்றன.
No comments:
Post a Comment