Sunday, November 30, 2014

திறனறி தேர்வில் கோவை பப்ளிக் பள்ளி மாணவர்கள் வெற்றி

மாணவர்களின் திறனறி தேர்வில், கோவை பப்ளிக் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

மாநில அளவிலான, சயின்ஸ் ஒலிம்பியாட் பவுண்டேஷன் சார்பில், மாணவர்களின் திறனை வெளிப்படுத்தும் வகையில், சமீபத்தில் தேர்வு நடத்தப்பட்டது. இதில், கோவை பப்ளிக் பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் சபரீஷ், ஜாசீம் ஹரீப் அகமது, பள்ளி அளவில் முதல் தரம் பெற்று, தங்கப் பதக்கம் வென்றுள்ளனர்.
இரண்டாம் வகுப்பு மாணவி லிசா, ஆயிரம் ரூபாய் காசோலையை பெற்றார். இவர்களுக்கு, தாளாளர் நிர்மலா தணிகைவேல், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

No comments:

Post a Comment