Sunday, November 23, 2014

ஆசிரியர்களுக்கு வாழ்வியல் திறன் பயிற்சி

மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் மற்றும் மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனம் சார்பில், ஒன்பது மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களை கையாளும் ஆசிரியர்களுக்கு வாழ்வியல் திறன் பயிற்சி வகுப்புகள் நடந்தன.

கோவை மாவட்டத்தில், திருமுருகன் நகர் மாவட்ட பயிற்சி நிறுவனம் சார்பில், அரசு பெண்கள் துணி வணிக மேல்நிலைப் பள்ளியில் இப்பயிற்சி வகுப்புகள் நடந்தன. பயிற்சி வகுப்பில், மன அழுத்தம் கட்டுப்பாடு, பிரச்னைக்கான தீர்வு, தொடர்பு திறன், புதிய சிந்தனை மேம்பாடு உள்ளிட்ட பயிற்சிகளை, மாவட்ட பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் அளித்தனர்.

No comments:

Post a Comment