Sunday, November 9, 2014

தனித்தேர்வு எழுத விரும்புவோர் 21ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

வரும் மார்ச்சில் நடக்கும் பிளஸ் 2 பொதுத் தேர்வை, தனித் தேர்வாக எழுத விரும்பும் தனித் தேர்வர்கள், வரும் 10ம் தேதி முதல் 21ம் தேதி வரை, இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

அதன் விவரம்
தனித் தேர்வர்கள், தேர்வுக்கு பதிவுசெய்ய வசதியாக, கல்வி மாவட்ட வாரியாக, சேவை மையங்களை தேர்வுத்துறை அமைத்துள்ளது. இதன் விவரங்களை  www.tndge.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
வரும் 10ம் தேதி முதல் 21ம் தேதி மாலை 5:00 மணி வரை, சேவை மையங்களுக்கு நேரில் சென்று, மாணவர்கள், தங்களது விவரங்களை பதிவுசெய்து கொள்ள வேண்டும். இவ்வாறு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment