Wednesday, November 19, 2014

விளையாட்டு உபகரணங்கள் பழுது: தவிப்பில் மாணவர்கள்

பொறையூர், ஆதிதிராவிடர் நலத்துறை நடுநிலைப் பள்ளியில் உள்ள விளையாட்டு திடல் மற்றும் உபகரணங்கள் பழுதானதால், பள்ளி மாணவர்கள் விளையாட முடியாத நிலை உள்ளது.

சித்தாமூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது, பொறையூர் ஊராட்சி. இவ்வூராட்சியில், ஆதி திராவிடர் நலத் துறை நடுநிலைப் பள்ளி அமைந்துள்ளது. பொறையூர் மற்றும் அம்மையம்பட்டு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், இப்பள்ளியில் படித்து வருகின்றனர். ஆனால், இப்பள்ளியில் பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட விளையாட்டு திடல் பழுதாகி, மாணவர்கள் விளையாட முடியாத சூழல் உள்ளது.
மேலும், பள்ளியை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்கப்படாததால், விடுமுறை நாட்கள் மற்றும் இரவு நேரங்களில் சமூக விரோதிகள், பள்ளி வளாகத்தை ஆக்கிரமித்து கொண்டு, பல்வேறு தீய செயல்களில் ஈடுபடுகின்றனர். எனவே, மாணவர்களின் நலன் கருதி, பள்ளியை சுற்றி சுற்றுச்சுவர் அமைத்து, விளையாட்டு திடல்களை சீரமைக்க, கல்வித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment