Sunday, November 9, 2014

42 பேருக்கு இன்று குரூப் 2 பிரதான மறுதேர்வு


காஞ்சிபுரம் மாவட்டம் மறைமலைநகரில் சனிக்கிழமை நடைபெற்ற குரூப் 2 பிரதான தேர்வை எழுத இயலாத 42 பேருக்கு இன்று மறுதேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


தேர்வர்கள் தங்குவதற்கான இடம் மற்றும் உணவு ஆகியவற்றை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையமே வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

குரூப் 2 பிரதான தேர்வு தமிழகம் முழுவதும் உள்ள 44 மையங்களில் நடைபெற்றது. இதில், மறைமலை நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற தேர்வில் 42 பேருக்கு கணினி ஒதுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. சுமார் 11 மணியளவில் அவர்களுக்கு கணினி ஒதுக்கப்பட்டது. இருப்பினும், இணையக் கோளாறு காரணமாக அவர்களால் தேர்வில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது.

No comments:

Post a Comment