Tuesday, January 7, 2014

ஆசிரியர் பட்டயத் தேர்வு: 8 மையங்களில் சான்றிதழ் வழங்கல்

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 2013-ம் ஆண்டு ஆசிரியர் பட்டயத் தேர்வு எழுதியதற்கான சான்றுகள் நேற்று முதல் வழங்கப்படுகிறது.
கடந்த 2013-ம் ஆண்டு ஆசிரியர் பட்டய தேர்வுக்கான முதல் மற்றும் 2-ம் ஆண்டு தேர்வு முடிவுகள் சனிக்கிழமை வெளியானது. இதற்கான மதிப்பெண் மற்றும் பட்டயச் சான்றுகள் திரூர் ஆசிரியர் பயிற்சி நிலையத்தில் வழங்கப்படுகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 8 மையங்களில் தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களுடைய ஹால் டிக்கெட், புகைப்படத்துடன் நிறுவனத்தின் அடையாள அட்டை, ஆகியவற்றை காண்பித்து மதிப்பெண் மற்றும் பட்டயச் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம்.
சுயநிதி ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் பயின்ற மாணவர்கள் தங்களுக்கு உரிய நிறுவனத்தில் ஆவணங்களை காண்பித்து மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம் என்று திருவள்ளூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment