Saturday, September 14, 2013

பி.எட்.,யில் புதிய பாடங்கள்!

பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் கல்விக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பி.எட் படிப்பில் புதிய பாடங்களுக்கு அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர்வதற்காக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்படும் டிஇடி தகுதித் தேர்வில், மிகக் குறைவான சதவீதத்தினரே தகுதி பெற்று வருகின்றனர்.
இந்த நிலையை மாற்றும் வகையில் பி.எட் படிக்கும் மாணவர்கள் படிப்பை முடித்த பிறகு டிஇடி தேர்வை எளிதாக எதிர்கொள்ளும் வகையில் இந்தப் படிப்பில் புதிய பாடப்பிரிவு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதோடு, 'கல்வியில் புதுமை மற்றும் பாடத்திட்ட மேம்பாடு' என்ற பாடத் திட்டமும் வரும் கல்வியாண்டு முதல் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் பி.எட்., கல்லூகளில் வேலை நாட்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் அறிவுறுத்தலின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதாவது இதுவரை 180 வேலை நாட்களாக நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது, இனி 200 வேலை நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது' என்று பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment