Sunday, September 29, 2013

குரூப்-2 தேர்வுக்கு இலவச பயிற்சி முகாம்

டி.என்.பி.எஸ்.ஸி குரூப்-2 தேர்வுக்கான இலவச வழிகாட்டுதல் முகாம் சென்னையில் சனிக்கிழமை(செப்.28)நடைபெறுகிறது.

டி.என்.பி.எஸ்.ஸி (அரசுப் பணியாளர் தேர்வாணையம்) குரூப்-2 பிரிவில் 1,064 காலி பணியிடங்களுக்கான தேர்வு டிசம்பர் 1-ஆம் தேதி நடைபெறுகின்றது. இத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு, தேர்வு தொடர்பான இலவச வழிகாட்டுதல் முகாம் சென்னை அண்ணாநகர் மேற்கு (திருமங்கலம்) பகுதியில் உள்ள ஃபோகஸ் அகாதெமியில் சனிக்கிழமை (செப்.28) நடைபெறுகிறது.
இந்த முகாமில் பங்கேற்பவர்களுக்கு தேர்வு தொடர்பான விளக்கம் அளிக்கப்படுவதோடு மாதிரி தேர்வும் நடத்தப்படுகிறது. முகாமில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் தங்கள் பெயர்களை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள 94427 22537, மற்றும் 044-26155686 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment