Sunday, September 22, 2013

10ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு மாலுமி பயிற்சி

தூத்துக்குடியிலுள்ள தமிழ்நாடு கடல்சார் பயிற்சி நிறுவனம் 6 மாத கால பொதுமுறை மாலுமி பயிற்சியை வழங்கவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுக்னறன.
இப்பயிற்சிக்கு மொத்தம் 40 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தமிழக அரசின் சட்டப்படி இட ஒதுக்கீடு பின்பற்றப்படும். ஆங்கில வழியில் பயிற்சி வழங்கப்படும்.

இப்பபயிற்சியில் சேர விரும்பும் ஆண்கள் 10ம் வகுப்பில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். அறிவியல் மற்றும் கணிதப் பாடங்களை கட்டாயம் படித்திருக்க வேண்டும். ஒருவேளை 10ம் வகுப்பு ஆங்கில பாடத்தில் 40சதவீத மதிப்பெண் பெறவில்லை எனில் 12ம் வகுப்பு ஆங்கில பாடத்தில் 40 சதவீத மதிப்பெண் பெற்றிருப்பது அவசியமாகும்.
விண்ணப்பிப்பவர் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். அக்டோபர் 8ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை பற்றி www.tn.gov.in/tnma/GPRatingCourse/prospectus.pdf என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment