Thursday, September 26, 2013

பிப்.,16ல் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வை நடத்த சிபிஎஸ்இ முடிவு

மத்திய மேல்நிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ), பிப்ரவரி 16 தேதியன்று மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை (CTET)-2014 நடத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிப்பதற்காக சிடிஇடி தேர்வு நடத்தப்படுகின்றது. ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை தகுதியுள்ள ஆசிரியர்களை தேர்வு செய்ய பிப்ரவரி 16ம் தேதியன்று சிடிஇடி தேர்வு நடத்தப்படுகின்றது.
இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆசிரியர்கள் விண்ணப்ப படிவத்தை சிபிஎஸ்இ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
கடைசியாக சிடிஇடி தேர்வு, கடந்த ஜூலை 28, 2013ல் நடத்தப்பட்டு, செப்டம்பர் 3ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. 9 லட்சம் பேர் இத்தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தன. ஆனால் 11 சதவீத பேர் மட்டுமே சிபிஎஸ்இ பள்ளிகளில் பாடம் நடத்த தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment