Wednesday, September 18, 2013

குரூப்-2 தேர்வு: ஒரு லட்சம் பேர் விண்ணப்பம்

சார்- பதிவாளர், வணிக வரித்துறை உதவி அலுவலர் உள்ளிட்ட பதவிகளை நிரப்ப, டி.என்.பி.எஸ்.சி., நடத்த உள்ள, குரூப் - 2 தேர்வை எழுத, பட்டதாரிகள், அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு, அக்., 4ம் தேதியுடன் முடியும் நிலையில், இதுவரை, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதாக, தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழக அரசின், பல்வேறு துறைகளில், குரூப் - 2 நிலையில், 1,064 பணியிடங்கள் காலியாக உள்ளன. டிசம்பர், 1ம் தேதி, முதல்நிலைத் தேர்வு நடக்கிறது. தேர்வாணைய இணையதளம் வழியாக, கடந்த, 5ம் தேதி முதல், பட்டதாரிகள் விண்ணப்பித்து வருகின்றனர்.
அக்., 4ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதுவரை, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. கடைசி தேதி முடிவதற்குள், மேலும், மூன்று லட்சம் பேர் வரை விண்ணப்பிக்கலாம் என தேர்வாணையம் எதிர்பார்க்கிறது.

No comments:

Post a Comment