Saturday, September 7, 2013

தேர்வு நாட்களில் ஆசிரியர்கள் விடுமுறை எடுக்கத்தடை: பள்ளி கல்வித்துறை

 காலாண்டு தேர்வை தொடர்ந்து, அந்த நாட்களில், ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் விடுமுறை எடுக்க, பள்ளி கல்வி துறை இணை இயக்குனர் தடை விதித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் 6, 7, 8, 9, 10 ம் வகுப்புகளுக்கு, செப்., 12, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு செப்., 10 முதல் செப்., 21 வரை, காலாண்டு தேர்வுகள் நடக்க உள்ளன. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கான வினாக் களை, அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு, தேர்வு துறையால் சிடி அனுப்பப்பட்டுள்ளது.
இதனிடையே,பள்ளி கல்வி இணை இயக்குனர் ஆர். ராஜேந்திரன், அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், "காலாண்டு தேர்வுகள் நடைபெறும் நாட்களில், ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் விடுமுறை எடுக்கக்கூடாது. பள்ளிகளுக்கு பாதுகாப்பான முறையில் வினாத்தாள் கொண்டு செல்லப்படுவதை, மாவட்டக் கல்வி அலுவலர்கள், முதன்மை கல்வி அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும்"என குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment